இது வரை எதையும் சாதிக்கவில்லைஎன்றாலும்
எங்களது எண்ணிக்கை நூறு கோடி !
இதோ இன்னும் விரட்டி கொண்டிருக்கிறோம் ,இருபது ஆண்டுகள்முன்னோக்கி போய்விட்ட நவீனத்தை !
இப்போதே சேர்த்து வைத்திருக்கிறோம் "கடன் தொகையை"
எங்கள் எதிர்கால சந்ததிக்கும் சேர்த்து !
ஊழல் செய்வதிலும் ஒழுக்க நெறிமுறைகள் உண்டிங்கு !
இது போன்ற இறையாண்மை இருப்பதெங்கு!
பட்டைய படிப்பிற்கு லஞ்சம் கொடுப்பது பழைய பண்பாடு !
லஞ்சதிற்கே பட்டைய படிப்பு வகுத்தது எங்கள் பாரத பண்பாடு !
விடுமுறை மட்டும் இல்லையென்றால் வேதனையில்
வீழ்ந்திருக்கும் ஆகஸ்ட்டு பதினைந்து !
காந்தி நோட்டு மட்டும் இல்லையென்றால்
புறக்கணிக்க பட்டிருக்கும் பொது தேர்தல் !
அவலங்கள் இது போன்று ஆயிரம் இருந்தாலும்
அடுத்த தலைமுறையும் படித்துகொண்டிருக்கும்
"பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரத நாடு"
Saturday, June 19, 2010
Subscribe to:
Posts (Atom)